search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு போட்டிகள்"

    • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தங்கம் 38, வெள்ளி 21, வெண்கலம் 39, ஆக மொத்தம் 98 பதக்கங்களும் வென்றன.
    • தேசிய அளவிலான நீச்சல், ரோலர் ஸ்கேட்டிங் , பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 83, வெள்ளி 113, வெண்கலம் 111, ஆக மொத்தம் 307 பதக்கங்களும் வென்றன.

    சென்னை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஊக்கத் தொகையை வழங்கினார்.

    கோவாவில் 37-வது தேசிய விளையாட்டு போட்டி, தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி, ஜெர்மனியில் 8-வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டு போட்டி, தாய்லாந்தில் உலக திறன் விளையாட்டு போட்டி, டெல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, பன்னாட்டு அளவில் பில்லியர்ட்ஸ் போட்டி, ஆசிய சைக்கிளிங் போட்டி, பல்வேறு மாநிலங்களில் தேசிய நீச்சல் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 601 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.16.31 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

    தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீதம் வேலைவாய்ப்பு ஒதுக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் கால்பந்து வீராங்கனை எஸ். ரங்கநாயகி, வீல்சேர் பென்சிங் வீராங்கனை ஆர்.சங்கீதா, வூசு வீராங்கனைகள் பி.அகல்யா மற்றும் ஆர்.வெர்ஜின் ஆகியோர் வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறையில் இளநிலை உதவியாளராக அரசுப் பணி ஆணை வழங்கப்பட்டது.

    விளையாட்டுப் போட்டியில் வென்ற பதக்கங்கள் விவரம் வருமாறு:-

    37-வது தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற தங்கம் 19, வெள்ளி 26, வெண்கலம் 34 ஆக மொத்தம் 79 பதக்கங்களும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தங்கம் 38, வெள்ளி 21, வெண்கலம் 39, ஆக மொத்தம் 98 பதக்கங்களும் வென்றன.

    மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தங்கம் 20, வெள்ளி 8, வெண்கலம் 14, ஆக மொத்தம் 42, 8-வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டு போட்டியில் தங்கம் 6, வெள்ளி 4, வெண்கலம் 6 ஆக மொத்தம் 16 பதக்கங்களும், தாய்லாந்தில் நடைபெற்ற உலக திறன் விளையாட்டு போட்டியில் தங்கம் 17, வெள்ளி 19, வெண்கலம் 12 ஆக மொத்தம் 48 பதக்கங்களும், தேசிய அளவிலான நீச்சல், ரோலர் ஸ்கேட்டிங் , பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 83, வெள்ளி 113, வெண்கலம் 111, ஆக மொத்தம் 307 பதக்கங்களும், பன்னாட்டு அளவில் நடைபெற்ற பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 1, வெள்ளி 2 ஆக மொத்தம் 3 பதக்கங்களும், ஆசிய சைக்கிளிங் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும், ஆக மொத்தம் 594 பதக்கங்களும் வென்றிருந்தது.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.
    • போட்டிகளில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் நெல்லை, தென்காசி மாவட்ட மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டி, விளையாட்டு போட்டி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரம் நடும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    தி.மு.க.மாநில சுற்றுச்சூழல்அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் சக்பி சுலைமான், சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் உசிலம்பட்டி அருணன், ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரி கல்லூரி டிரஸ்டி காவியா பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலடி அருணா லிபரல் கல்லூரி முதல்வர் முத்தமிழ் செல்வன் வரவேற்று பேசினார்.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கபடி, கைப்பந்து, வாலிபால் கோக்கோ, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து மரக்கன்றுகள் நட்டு பேசினார்.

    விழாவில் தென்காசி மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை, மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லப்பா, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, கடையம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் மாயவன். ஜெயக்குமார், முக்கூடல் பேரூர் செயலாளர் லெட்சு மணன், ஆழ்வார்குறிச்சி அழகேசன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கிருஷ்ண ராஜ், கீழப்பாவூர் பேரூர் முன்னாள் தலைவர் பொன் அறிவழகன், வக்கீல் சிவக்குமார் ரஞ்சித், பஞ்சு அருணாச்சலம், ஜெபராஜன், மணிகண்டன், ஆலடி அருணா லிபரல் கல்லூரி பேராசிரியர்கள், ஆலடி அருணா நர்சிங் கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரை யாளர்கள் மாணவ -மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற விளையாட்டு கலை இலக்கிய போட்டிகளில் தென்காசி, ஆலங்குளம், மருதம்புத்தூர், மாறாந்தை, நெட்டூர், நல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில்,சுந்தரபாண்டியபுரம், பாவூர்சத்திரம் அகரக்கட்டு, ஆவுடை யானூர், செங்கோட்டை வீரசிகாமணி, அம்பாச முத்திரம் விக்கிரமசிங்கபுரம், கல்லிடைகுறிச்சி பகுதிகளில இருந்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, கல்லூரி டிரஸ்டி காவியா பாலாஜி ஆகியோர் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
    • கண்ணமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் திருவண்ணாமலையில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

    இதில் 19 வயதுக்குட்பட்ட உயரம் தாண்டுதலில் ராகுல், 400 மீ ஓட்டப்பந்தயத்தில் இளங்கோவன் ஆகியோர் முதலிடமும், 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கிஷோர் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மேலும் ராகுல், இளங்கோவன் ஆகிய இருவரும் மாநில அளவில் நடக்க உள்ள விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதாக உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார். அப்போது உடற்கல்வி ஆசிரியர் அன்புகுமரன் உடனிருந்தார்.

    • சேலம் ஊரக குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவி களுக்கான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
    • கிளேஸ் ஸ்புரூக்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் 2 நாட்கள் நடை பெற்றது.

    கருப்பூர்:

    தமிழ்நாடு அரசின் பள்ளி துறை சார்பில் சேலம் ஊரக குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவி களுக்கான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

    இதன் இறுதிப்போட்டி சேலம் அழகாபுரம் நகர மலை அடிவாரத்தில் உள்ள கிளேஸ் ஸ்புரூக்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் 2 நாட்கள் நடை பெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த

    900-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர்.

    அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் கோமதி ராணி, அனைவரையும் வரவேற்று மாணவர்கள் ஏற்றி வந்த ஜோதியை பெற்றுக் கொண்டார். கிளேஸ் ஸ்புரூக் மெட்ரிக் பள்ளி செயலாளர் பால சுப்பிரமணியம், தலைமை தாங்கினார்.

    பள்ளி தாளாளர் சுப்பிர மணியம், மாவட்ட விளை யாட்டு துறை ஆய்வாளர் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சுழல் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

    விழாவில் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.
    • சிறப்பு நிகழ்ச்சியாக வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை யொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இளைஞர்க ளுக்கான உறியடி, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஏராள மான இளைஞர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விழா குழுவினர் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. 

    • வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 7 அணிகளும் பங்கேற்க உள்ளன.
    • கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பிற்பகல் வேளையில் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    ஈஷா கிராமோத்வசம் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல்நிலை பள்ளியில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் 'ஈஷா கிராமோத்சவம்'குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஈஷா அவுட்ரீச் சார்பில் நடத்தப்படும் 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' என்னும் கிராமிய விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. முதல்கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் வரும் 10-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி, திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல்நிலை பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியும், இருபாலருக்கான கபடி போட்டிகளும் நடைபெறவுள்ளன.

    வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 7 அணிகளும் பங்கேற்க உள்ளன.

    இப்போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும். கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பிற்பகல் வேளையில் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.

    மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இறுதி போட்டியில் பங்கு பெறும் வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும். இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.

    இறுதிப்போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பர் 23-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிப்பார்கள். இத்திருவிழாவில் ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் வரை பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
    • வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும்.

    'ஈஷா கிராமோத்வசம்' திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் வேலூர் வாலாஜா ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூரில் இன்று நடைபெற்றது. இதில் 'ஈஷா கிராமோத்சவம்' குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஈஷா அவுட்ரீச் சார்பில் நடத்தப்படும் 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' என்னும் கிராமிய விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. முதல்கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் வரும் 10-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள வன்னிவேடு பகுதியில் அமைந்திருக்கும் வாலாஜா ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியும், பெண்களுக்கான த்ரோபால் போட்டியும் மற்றும் இருபாலருக்கான கபடி போட்டிகளும் நடைபெறவுள்ளன. வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், த்ரோபால் போட்டியில் மொத்தம் 10 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 6 அணிகளும் பங்கேற்க உள்ளன.

    இப்போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும். கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம். இதை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பிற்பகல் வேளையில் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும்.

    இறுதிப்போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பர் 23-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிப்பார்கள். இத்திருவிழாவில் ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் வரை பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இறகு பந்து போட்டியில் முகிலன், அனுசரா, ஸ்ரீவர்ஷினி போன்றவர்கள் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றனர்.
    • வாலிபால் போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி அணியினர் தங்கபதக்கம் பெற்றனர்.

    தென்காசி:

    தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியினை சி.பி.எஸ்.இ. பள்ளிகளும், மதுரை சகோதயா அமைப்பும் இணைந்து நடத்தியது.

    இதில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் கால்பந்து, வாலிபால், இறகுபந்து, செஸ் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு தங்கபதக்கம், வெள்ளிபதக்கம் பெற்றனர்.12 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் தங்கப் பதக்கமும், 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் வெள்ளிபதக்கமும் பெற்றனர்.

    இறகு பந்து போட்டியில் முகிலன், அனுசரா, ஸ்ரீவர்ஷினி போன்றவர்கள் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றனர். வாலிபால் போட்டியில் 12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் வெள்ளி பதக்கமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி அணியினர் தங்கபதக்கமும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி சேர்மன் இசக்கி சுப்பையா, மேலாளர் இசக்கித்துரை, பள்ளி முதல்வர் மோனிகா டீசோசா, துணைமுதல்வர் ஜெயாக்கியா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாலமுருகன், ஸ்டீபன் தங்கராஜ், சோபியா, சேவியர், பரலோகராஜா ஆகியோர் பாராட்டினர்.

    • போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.
    • கபடி, எறிபந்து மற்றும் கோகோ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    தருமபுரி, 

    தருமபுரி சரக அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாளில் மாணவர்களுக்கான போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். கபடி, எறிபந்து மற்றும் கோகோ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் 14 வயது முதல் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இதேபோன்று 2-து நாளில் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இப்போட்டியை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மான்விழி தொடங்கி வைத்தார்.

    மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் 14 வயது முதல், 17 வயதுடைய 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலை மையாசிரியர் தங்கவேல், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ரேணுகாதேவி, உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்.

    கடந்த 2 நாட்களில் நடந்த போட்டிகளில் மொத்தம் 550 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சரக அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது.
    • திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 49 பள்ளிகளைச் சார்ந்த 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி, வினாடி வினா, ஓவியம் ,கட்டுரை,பேச்சுப் போட்டி, சமையல் உள்பட பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது. ஏ.யு. ஆர்.ஏ.2023 கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 49 பள்ளிகளைச் சார்ந்த 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிகளில் 9,10,11, 12-ம் வகுப்புகளுக்கான பிரிவுகளில் 140 புள்ளிகளைப் பெற்று மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் என்.பி.ஆர்.பொறியியல் கல்லூரி முதல்வர்கள் சுந்தரராஜன், கலை அறி வியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆனந்த், நர்சிங் கல்லூரி முதல்வர் அன்னலெட்சுமி மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்திட வேண்டும்.
    • நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க ஊராட்சி முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள், ஒரு லட்சம் பனை விதைகள், நடவு செய்திட வேண்டும்

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் எர்ரபையன அள்ளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் நேற்று கிராமசபை கூட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட 42 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பழ தோட்டத்தில் நடைபெற்றது.

    இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு தீர்மா னங்களாக ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து நீர் நிலைகளையும் முழுமையாக புனரமைத்து அடுத்த ஆண்டிற்குள் மழை நீர் முழுவதையும் ஏரிகளில் தேக்கியும், புதிய நீர் நிலைகளை அமைத்தும், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்தும் பணிகளை முடிப்பதாகவும், அதன் மூலம் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்திட வேண்டும்.

    அது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க ஊராட்சி முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள், ஒரு லட்சம் பனை விதைகள், நடவு செய்திட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 42 ஏக்கர் பரப்பள வில் அமைக்க பட்ட பழத்தோட்டத்தை தொடர் பராமரிப்பு மூலம் பலன் தரும் பத்தாயிரம் மரக்கன்று களையும் பராமரித்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட வேண்டும்.

    அதேபோல் எர்ர பையனஹள்ளி ஊராட்சி முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத தூய்மை யான பசுமையான கிராம மாக மாற்றுவதே இலக்கு என்பதையும் பொதுமக்கள் ஆதரவுடன் செயல்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பழ தோட்டம் பகுதியில் புதிதாக சீரமைக்கபட்ட ஏரி கரை பகுதியில் 100 நாள் திட்ட பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் மரக்கன்று களை நட்டு வைத்தனர்.

    மேலும் அக்கிராமத்தில் அம்ருத் மஹோத்சவ் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் உள்ளி ட்டோருக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் வழங்கினார்.

    இதில் ஊராட்சி துணைத் தலைவர் ரஞ்சித் குமார், செயலாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், வார்டு உறுப்பி னர்கள், ஊராட்சியை சேர்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அனைத்து திட்ட பணியாளர்கள் எர்ரபையனஹள்ளி ஊராட்சியை சேர்ந்த இளைஞ ர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நூற்றாண்டு விழா மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 43 மாணவர்களுக்கு கேடயம்- பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மதுரை

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு நிகழ்வாக உலக சாதனையை நோக்கி மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் 2752 தூய்மை பணியாளர்களை கொண்டு 1 மணி நேரம் 20 நிமிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவத்தை வடிவமைத்து உலக சாதனை "டிரம்ப் புத்தகத்தில்" இடம் பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

    போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடத்தப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 180 மாணவ, மாணவியர்கள் ஐந்து மண்டலங்களிலும் மண்டல அளவில் நடைபெற்ற போட்டி களில் பங்கு பெற்றனர்.

    மதுரை மாநகராட்சி 27 நடுநிலைப் பள்ளிகள், 24 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை நடத்துவதற்கு ஒருங்கிணைப் பாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இந்த பேச்சுப்போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் 89 மாணவ, மாணவிகள், 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் 40 மாணவ, மாணவிகள், 11 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பயிலும் 23 மாணவ, மாணவிகள் என மொத்தம் 152 மாணவ, மாணவிகள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக் கிடையே நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி ெபான்வசந்த், கலெக்டர் சங்கீதா, ஆணையாளர் பிரவீன் குமார், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் ஞான சம்பந்தன், பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி, துணை ஆணையாளர் சரவணன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாநகராட்சி கல்வி அலுவலர் நாகேந்திரன், கவுன்சிலர் முருகன், ஒருங்கி ணைப்பா ளர் சண்முகதிருக்குமரன் மற்றும் ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×